Thursday, May 19, 2011



உன்னால் முடியும் என்று சொல்லி
நீ என்னை பார்க்காமல் பேசாமல் இருந்த
முப்பது நாட்களின் வலி... கோபம்...
எல்லாமே கரைந்துவிட்டது உன்னைப்  பார்த்த
அந்த நொடியில் உதித்த மகிழ்ச்சியில்...





காதலிக்கும் பொது நீ தந்த
முத்தத்தில் காதல் காமம் இரண்டையும் கண்டேன்...
ஆனால் இப்போது நீ தந்த முத்தத்தில்
என்றும் நீங்காத உன் அளவு கடந்த
பாசத்தை மட்டுமே கண்டேன்...

வாலிப வயதில் எல்லோருக்கும் முத்தம் கிடைக்கலாம்...
ஆனால் இந்த வயதிலும் அதே காதலுடன் நீ தரும் முத்தம்
எனக்கு மட்டுமே...






நண்பா...
என் இன்ப துன்பம் இரண்டிலும் என்னோடு இருக்கிறாய்...
எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாய்..
என் காதலை தவிர...

காதலை நேரடியாக உன்னிடம் சொல்லும் தைரியம்
எனக்கு இல்லை...
அதை புரிந்து கொள்ளும் பக்குவம்
உன்னிடம் இல்லை...

உன் முன் புன்னகைத்தாலும்
என் காதலும் இந்த ரயில் தண்டவாளத்தை போல்
என்றுமே இணையாது போய்விடுமோ என எண்ணி
உள்ளுக்குள் குமுறுகிறேன்......






நீ என் அருகில் இருக்கும் வரை
எல்லாமே ஒளிமயமகத்தான் இருக்கிறது..
நீ என் அருகில் இல்லாத பொது
எல்லாமே இருண்டுவிடுகிறது...

எனக்குள் ஒன்றாய் எப்போதும் நீ
 வேண்டும் என் அருகில்...
இந்நொடி இறந்தாலும் மகிழ்ச்சியுடன்
இறப்பேன் நீ என் அருகில் இருந்தால்!!!





எத்தனையோ கிளைகள் இருந்தும் இந்த
மரத்தில் ஒரு வெறுமை...
இந்த விடயத்தில் நானும் மரமும் ஒன்றே...
எத்தனை பேர் என்னை சுற்றி இருந்தாலும்
என்னிலும் ஒரு வெறுமை...

இந்த மரத்தை பனி சூழ்ந்துள்ளது போல
என்னை சோகம் சூழ்ந்துள்ளது...
நீயில்லாத தனிமை என்னை வாட்டி வதைக்கிறது..

என்னை பூத்துக் குலுங்கும் மரமாக பார்ப்பதில்
உனக்கு ஆசையில்லை...
நான் வெட்டவெளியாய் இருந்ப்பதில் தான்
உன் மகிழ்ச்சி என்றால் அதையும் உனக்காக
செய்வேன் நான்!!!












2 comments: